Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் முறைகேடு விவகாரம்.. 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை..!

Mahendran
வியாழன், 18 ஜூலை 2024 (10:49 IST)
நீட் முறைகேடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற முறை கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருக்கும் நிலையில் இந்த தேர்வில் அப்போது முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுதன.

குறிப்பாக இந்த ஆண்டு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் 3 எய்ம்ஸ் மருத்துவர்களை சிபிஐ அதிகாரிகள்   கைது செய்துள்ளதாகவும் அவர்களுடைய மொபைல் போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடைய கும்பலுடன் இந்த மருத்துவர்கள் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் விசாரணைக்கு பின்னர் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.

இந்த நிலையில் நீட் தேர்வு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments