Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கடாசலபதிக்கு விஐபி ஆகனுமா?? 10 ஆயிரம் நன்கொடை கொடுங்க..

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (13:42 IST)
திருப்பதியில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

திருப்பதியில் விஐபி தரிசனம் பெற எம்.எல்.ஏ. காவல் துறையினரின் அனுமதி கடிதம், ஆகியவை தேவை. மேலும் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். இதை தொடர்ந்து தரகர்கள் விஐபி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தற்போது ஆலய மேம்பாட்டிற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்குவோருக்கு விஐபி தரிசனம் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இத்துடன் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments