Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயரதிகாரிக்கு பெண் அதிகாரி காலணி கயிற்றை கட்டிவிட்ட சம்பவம்! முதல்வர் அதிரடி உத்தரவு

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (19:13 IST)
மத்திய பிரதேசத்தில்  உயரதிகாரி ஒருவரின் ஷூவின் கயிற்றை ஒரு பெண் அதிகாரி கட்டிவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள சிங்ராவ்லி என்ற மாவட்டத்தில் சித்ராங்கி நகரில் சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் அஸ்வன்ராம் சிராவன்.  இந்த நிலையில், இவரது ஷூவின் கயிற்றை ஒரு பெண் அதிகாரி கட்டிவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில், ‘’உயரதிகாரியின் காலணி கயிற்றை பெண் அதிகாரி கட்டிவிட்டதாக கூறப்படுவது கண்டனத்திற்குரியது, உடனடியாக அந்த அதிகாரியை பதவியில் இருந்து நீக்கும்படி  உத்தரவிட்டுள்ளேன். எங்களுடைய அரசியல் பெண்களுக்கான மதிப்பு அதிகம் முக்கியத்துவமானது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

தைப்பூசம் முடிந்த பின்னரும் குறையாத கூட்டம்.. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு..!

ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments