Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (16:01 IST)
அரியனாவில் தனியார் பள்ளி தலைமை அசிரியரை 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அரியனா மாநிலம் யமுனாகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 1500 அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரை, அந்த பள்ளியில் பயின்று வரும் 12-வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் தலைமை ஆசிரியர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இதையடுத்து விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாணவனை கைது செய்து, அவனிடம் எப்படி துப்பாக்கி வந்தது  குறித்தும் தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரால் தலைமை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments