Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டுக்கொடுக்கும் தமிழிசை: தோல்வி பயத்தில் உளறிய பரிதாபம்

Advertiesment
தமிழிசை
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:38 IST)
5 மாநில சட்டபேரவை தேர்தலில் பின்னடைவில் உள்ள பாஜக தோல்வியைக் கண்டு ஒரு போதும் துவளாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
5 மாநில தேர்தல்களில் தெலிங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மத்தியபிரதேசம், சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோரமை பொறுத்தவரை எம்.என்.எஃப் முன்னிலையில் உள்ளது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தோல்வியைக் கண்டு பாஜக ஒரு போதும் துவளாது. மோடியை தவிர எந்த சக்தியும் பெரிய சக்தியாக ஆக முடியாது. பாஜக ஒரு மிகப்பெரிய கட்சி, அதை யாராலும் அசைக்க முடியாது என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி அலை ஒருநாளும் ஓயாது.. ஓயவைக்கவும் முடியாது – தமிழிசை ஆவேசப் பேட்டி