Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அரங்கில் நம் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் தமிழன்...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (16:19 IST)
மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாவது பாரா ஒலிம்பிக் போட்டி வருகிற அக்டோபர் 6 முதல் 13 வரை நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, நம் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரரான மாரியப்பனுக்கு கிடைத்துள்ளது.
 
இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பல்வேறு துறைகளில் தமிழர்கள் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் தடகள வீரர் மாரியப்பன் நம் தேசிய கொடியை ஏந்திச் செல்வது  தமிழர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments