Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு தடையில்லை..

Arun Prasath
புதன், 18 டிசம்பர் 2019 (11:45 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், திமுக உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போடப்பட்ட 59 வழக்குகளையும் விசாரித்த உச்சநீதிமன்றம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பாக ஜனவரி 22 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments