Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் மனு: திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி..!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:36 IST)
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளதை அடுத்து ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வாங்கி கொடுப்போம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருந்தது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் வெற்றி பெற்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments