Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி எம்.பி. ரவிந்திரநாத் அதிமுகவில் மீண்டும் இணைப்பா?ஜெயகுமார் பேட்டி

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:22 IST)
தேனி எம்பி ரவீந்திரநாத் அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் அதிமுக இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொது குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேனி தொகுதி எம்பியும் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் மகனுமான ரவீந்திரநாத் அதிமுகவின் உறுப்பினர் இல்லை என்றும் அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பாராளுமன்ற சபாநாயகரிடம் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதும் இனிமேல் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் கையில் தான் உள்ளது என்றும் எங்களைப் பொருத்தவரை அவருக்கும் அதிமுகவும் சம்பந்தமில்லை என்பது நிலைமை என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments