Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறைக்கு செல்லும் தேசவிரோதி ப.சிதம்பரம்: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!!

சிறைக்கு செல்லும் தேசவிரோதி ப.சிதம்பரம்: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!!
, திங்கள், 30 அக்டோபர் 2017 (12:09 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு தேசவிரோதி என விமர்சனம் செய்து சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.


 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் காஷ்மீர் மக்கள் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை அமல்படுத்த விரும்புவதாகவும், சுயாட்சியையே காஷ்மீர் மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
 
மேலும், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார். அதோடு 2019 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாறும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
 
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துகளுக்கு பாஜக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சிதம்பரம் ஒரு தேசவிரோதி போல் பேசுகிறார். அவர் விரைவில் சிறைக்கு செல்வார். அப்போது காஷ்மீரிலிருந்து சிலர் அவருக்காக கண்ணீர் சிந்துவர் என்று விமர்சனம் செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடு புகுந்து என்னை கற்பழித்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்