Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் எதிரொலி; சிறப்பு ரயில்கள் முழு விவரங்கள்..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (07:45 IST)
சபரிமலையில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் இருப்பதை எடுத்து இந்தியன் ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முழு தகவல்களை தற்போது பார்ப்போம்


07113/07114 என்ற சிறப்பு ரயில் காக்கிநாடா நகரில் இருந்து இம்மாதம் 28, ஜனவரி 4, 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து இம்மாதம் 30, 6, 13, 20 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் அதிகாலை 4 மணிக்கு காக்கிநாடா சென்றடையும்.

07009/07010 என்ற சிறப்பு ரயில் ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.05 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில்  கோட்டயத்தில் இருந்து ஜனவரி 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, இரண்டாவது நாள் காலை 5 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெலுங்கு மாநிலங்களில் இருந்து 51 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களின் எண்கள் மற்றும் தேதிகள் ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments