Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி பிரம்மோற்சவ விழா: சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யும் தமிழக போக்குவரத்து துறை..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (12:07 IST)
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதை எடுத்து தமிழக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம், நான்காம் தேதி பிரமோற்சவ விழா, எட்டாம் தேதி கருட சேவை ,பன்னிரண்டாம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த பிரம்மோற்சவ விழாவை காண தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பரிசுகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments