Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமல் கடிக்கும் பாம்புகள்! சாகாமல் தப்பிக்கும் இளைஞர்! - ஒருவழியாக ரகசியத்தை கண்டுபிடித்த மருத்துவர்கள்!

Prasanth Karthick
வியாழன், 18 ஜூலை 2024 (12:20 IST)

உத்தர பிரதேசத்தில் விகாஸ் துபே என்ற இளைஞரை பாம்புகள் வாரம்தோறும் கடித்து வந்த செய்திகள் வைரலான நிலையில், அந்த இளைஞரை மருத்துவர்கள் செய்த ஆய்வில் பாம்பு கடி குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பதேபூரை சேர்ந்த இளைஞர் விகாஸ் துபே. இவரை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆங்காங்கே பாம்புகள் கடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டிலிருக்காமல் தனது சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அவர் சென்றபோது அங்கும் பாம்புகள் அவரை கடித்துள்ளது.

வார இறுதி நாட்களில் தான் எங்கிருந்தாலும் பாம்புகள் தேடி வந்து கடிப்பதாக கூறும் அவர், இதுவரை தன்னை 7 முறை பாம்புகள் கடித்து விட்டதாகவும், 9வது முறை அது கடித்ததும் தான் இறந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் செய்யவும், மேற்கொண்டு பாம்பு அவரை கடிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்யவும் மருத்துவர்களுக்கு பதேபூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
 

ALSO READ: வகுப்பறையில் போதைப்பொருள்.. 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்த தலைமை ஆசிரியர்..!

அதன்படி, மருத்துவர்கள் விகாஸ் துபேவை பரிசோதித்ததில் அவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்தது தெரிய வந்துள்ளது. முதல் முறை பாம்பு கடித்ததற்கு சிகிச்சை எடுத்த அவர், அதன்பின்னர் ஒவ்வொரு வாரமும் தன்னை பாம்பு கடிப்பதாக கற்பனையாக நினைத்துக் கொண்டு அவ்வாறு கூறி வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு மனநல சிகிச்சைகள் அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments