Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான சீதாராம் யெச்சூரி மகன்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:22 IST)
கொரோனாவுக்கு பலியான சீதாராம் யெச்சூரி மகன்: அதிர்ச்சி தகவல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மகன் ஆசிஷ் யெச்சூரி கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிஷ் யெச்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்
 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். எனது மகன் கொரோனாவுக்கு பலியானதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி என உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் 
 
இந்த டுவிட்டை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் அரசியல்வாதி ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments