Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏம்பா பாத்ரூமையும் விட்டுவைக்க மாட்டீங்களா? தொடரும் யோகியின் அட்ராசிட்டிஸ்

Webdunia
ஞாயிறு, 3 ஜூன் 2018 (12:41 IST)
உத்திரபிரதேசத்தில் கழிவறையிலும் காவி நிறம் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பாஜகவை சேர்ந்த இவர் பதவியேற்றத்திலிருந்தே உத்திரபிரதேசத்தில் காவி நிறம் மேலோங்கி காணப்படுகிறது.
 
அரசு அலுவலங்கள், பள்ளிகள் என பல கட்டிடங்களுக்கு பாஜக பக்தாள்கள் பலர் காவி நிறத்தை பூசி அட்ராசிட்டி செய்து வருகின்றனர். இது அவர்களாக செய்கிறார்களா> அல்லது மேலிடத்தின் உத்தரவா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
 
கொடூரத்தின் உச்சமாய் கடந்த மாதம் பாஜகவை சேர்ந்த சிலர் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறத்தை பூசினர். இச்சம்பவம் நாடுமுழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சிலைக்கு மீண்டும் நீல நிறம் பூசப்பட்டது. 
இந்நிலையில் சமீபத்தில் அரசு நிகழ்ச்சிக்கு முதல்வர் யோகி ஆதித்யனாத் தலைமை தாங்கினார். யோகியின் வருகையையொட்டி விழா மேடை, தோரணங்கள் எல்லாம் காவி நிறத்தில் காணப்பட்டது. கழிவறையில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளை டைல்ஸ் ஓடுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments