Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் கிடைத்தும், ப.சிதம்பரத்திற்கு சிறையே கதி!!

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (10:54 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். 
 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவரானதன் அடிப்படையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து சிபிசி விசாரித்து வந்தது. 
 
இதன் பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பல முறை ப.சிதம்பரம் ஜாமீனுக்கு கோரியபோதும், அதை நிராகரித்த நீதிமன்றம் தற்போது ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 
 
ஆம், ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும், வெளிநாடு செல்லக்கூடாது என்றும்  நிபந்தனை விதித்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சிபிஐயால் கைது செய்யப்பட்டு கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments