Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (08:55 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள   பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதனால் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியில் அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் இம்முறை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவித்துள்ளது
 
குறிப்பாக இன்றும், நாளையும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்றும் வெள்ளத்தின் அளவு குறைந்த பின்னர் தேவசம் போர்டு அறிவிப்புக்கு பின்னர் பக்தர்கள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments