சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (08:55 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள   பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதனால் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியில் அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் இம்முறை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவித்துள்ளது
 
குறிப்பாக இன்றும், நாளையும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்றும் வெள்ளத்தின் அளவு குறைந்த பின்னர் தேவசம் போர்டு அறிவிப்புக்கு பின்னர் பக்தர்கள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments