Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

Mahendran
புதன், 26 மார்ச் 2025 (10:12 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா சிறப்பாக நடத்தப்படும். இந்த வருடத்திற்கான விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றி விழாவை தொடங்குகிறார் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நாட்களில் தினசரி வழக்கமான பூஜைகள் மற்றும் உத்சவ பலி ஆகியவை சிறப்பாக நடத்தப்படும். ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்வு நடைபெறும்.
 
விழாவின் கடைசி நாளான ஏப்ரல் 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்வு நடக்கிறது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
 
மேலும், சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஷு பண்டிகை ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும். இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments