Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேம்பாலத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்ட தொழிலதிபர் கைது!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:39 IST)
மேம்பாலத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்ட தொழிலதிபர் கைது!
மேம்பாலத்திலிருந்து பத்து ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்ட தொழில் அதிபர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
பெங்களூர் கே ஆர் மார்க்கெட் என்ற பகுதியில் உள்ள மேம்பாலத்திலிருந்து இன்று மதியம் திடீரென தொழிலதிபர் அருண் என்பவர் பத்து ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு பணமழை பொழிய விட்டார். 
 
மேம்பாலத்தில் கீழ் இருந்த மக்கள் ரூபாய் நோட்டுகளை எடுக்க போட்டோ போட்டி போட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரூபாய் நோட்டுக்களை பெங்களூர் மேம்பாலத்திலிருந்து பறக்க விட்டவர் அருண் என்ற தொழில் அதிபர் என்று தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். 
 
எதற்காக அவர் பணத்தை பறக்க விட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் நடத்தி வரும் அருண் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments