Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளர் கைது!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:08 IST)
50 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனையில் பணம் பெற்றுக் கொண்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்ற பகுதியில் 50 ரூபாய்க்கு மருத்துவ பணியாளர் ஒருவர் தடுப்பூசி என்று போலியான மருந்தை ஒரு சிலருக்கு செலுத்தியுள்ளார். 50 வயதான மோகன்ராம் என்ற அந்த மருத்துவ பணியாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வாயு பிரச்சனைக்கு செலுத்தப்படும் ஊசிகளை கொரோனா தடுப்பூசி என ஏமாற்றி பொதுமக்களுக்கு செலுத்தி பணம் பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments