பால் விவசாயிகளுக்கு ரூ.3 கோடி தீபாவளி ஊக்கத்தொகை! - முதல்வர் அறிவிப்பு!

Prasanth K
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (13:28 IST)

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு சார்பில் மானிய விலை பொருட்கள் விற்பனை செய்வது வழக்கமாக உள்ள நிலையில், பல நிர்வாக கோளாறுகள் காரணமாக இந்த முறை அங்காடிகள் அமைக்கப்படவில்லை. ஆனால் பட்டாசு சிறப்பு விற்பனை அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

 

அதன் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் ரெங்கசாமி “நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை, காய்கறிகள், பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது. 

 

பாண்லே நிறுவனத்திற்கு 102 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வழங்கிய 7500 பயனாளிகளுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments