சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலால் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (12:09 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சென்னை, நீலாங்கரை இல்லத்துக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
 
சீமானின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு வந்த தகவலை அடுத்து, காவல்துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது. மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சீமான் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
 
நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, இந்த மிரட்டல் ஒரு புரளி என்று உறுதி செய்யப்பட்டது. அண்மைக் காலமாகவே, கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், அவை புரளிகள் என தெரியவருவதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments