Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கு விண்ணப்பித்த இளைஞரின் பெயரில் ரூ.250 கோடி மோசடி.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!

Mahendran
புதன், 4 செப்டம்பர் 2024 (15:29 IST)
.உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்த நிலையில் தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தார். ஆனால் அந்த ஆவணங்களை வைத்து மர்மகும்பல் போலி நிறுவனம் ஒன்று தொடங்கி ரூ.250 கோடி மோசடி செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அஸ்வினி குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வேலைவாய்ப்பு குறித்த செய்தி வந்ததை நம்பி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

அதற்காக தனது வீட்டின் மின் கட்டணம், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவர் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. மேலும் வேலைக்கு ரூபாய் 1750 பணத்தையும் அவர் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

ஆனால் அவரது ஆவணங்களை தவறாக பயன்படுத்தி மர்ம நபர்கள் ஒரு வங்கி கணக்கை உருவாக்கி, போலியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, சுமார் 250 கோடி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணை செய்தபோது தான் வேலைக்கு விண்ணப்பித்த இளைஞர் அஸ்வினி குமார் ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments