Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 நாள் தரிசனம் மறுப்பு ஏன்? திருப்பதியில் திருடப்போகிறீர்களா? ரோஜா ஆவேசம்

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (22:06 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால் பக்தர்களுக்கு ஏழுநாள் தரிசன அனுமதி கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளதற்கு நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா ஆவேசம் அடைந்துள்ளார்.
 
ஏழு நாட்கள் பக்தர்களை அனுமதிக்காமல் திருப்பதியில் சுரங்கம் தோண்டி திருடப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள ரோஜா, தரிசனத்தின்போது பக்தர்களை அனுமதிக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.
 
கடந்த 1994ஆம் மற்றும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு மட்டும் அனுமதி இல்லை என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ள ரோஜா, சிசிடிவிகளையும் அணைத்துவிடுவாத கூறியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போனாதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக ஏழுநாட்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments