Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் கார்டுக்குப் பதில் ஆதார் – வருவாய் துறை அறிவிப்பு !

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (08:27 IST)
பான்கார்டு பயன்படுத்தும் இடங்களில் இனி ஆதார் கார்டுகளை பயன்படுத்தலாம் என்பதற்கு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு அனைத்து இந்திய மக்களுக்குமான அடையாள அட்டையாக ஆதார் கார்டை வழங்கி வருகிறது. எல்லாவிதமான பரிவர்த்தணைகளுக்கும் அரசு செயல்பாடுகளுக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆதாரின் மூலம் தனிமனிதனின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்  பான் கார்டு பயன்படுத்தும் இடங்களில் ஆதாரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை வங்கிகளில் ரூ.50,000க்கும் மேலான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. ஆனால் இனி ஆதார் தொடர்பான விவரங்களை வழங்கினால் போதுமானது.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே ’ ஆதார் அட்டையுடன் சுமார் 22 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் 120 கோடி ஆதார் அட்டைகள் நாட்டில் உள்ளன. அதனால் பான் கார்டு உபயோகிக்க வேண்டிய இடங்களில் ஆதாரை அனுமதிப்பது மக்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் பான் கார்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments