Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி வெற்றி பெற்றாலும் ஒரு ஆண்டு தான் பிரதமராக இருப்பார்: தெலுங்கானா முதல்வர் பேச்சு..!

Siva
சனி, 11 மே 2024 (16:14 IST)
பிரதமர் மோடிக்கு தற்போது 74 வயதாகிறது என்றும் பாஜகவில் பொதுவாக 75 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதால் பிரதமர் மோடி பிரதமர் ஆனாலும் அவர் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார் என்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி உள்ளார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய போது 75 வயது ஆகிய எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள் என்றும் மோடிக்கும் தற்போது 74 வயதாகும் நிலையில் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆனாலும் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜகவை பொறுத்தவரை 75 வயது ஆகிவிட்டால் ஓய்வு பெற்ற வேண்டும் என்பதுதான் கொள்கை என்றும் அப்படித்தான் இதற்கு முன்னர் இருந்த தலைவர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்றும் ஆனால் 75 வயது ஆன பிறகு பிரதமர் மோடி ஓய்வு பெற தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டையும் மோடி பாழாக்கிவிட்டார் என்றும் நாடு மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது என்றும் இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments