Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் பிரதமர் மோடி.! ராகுல் காந்தி விமர்சனம்..!

Modi Ragul

Senthil Velan

, வெள்ளி, 10 மே 2024 (15:56 IST)
மக்களவைத் தேர்தலையொட்டி, தன்னைக் காப்பாற்றும்படி அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னவுஜில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் உரை நிகழ்த்தியுள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிட்டுப் பேசியது இல்லை என்றார். யாராவது பயம் கொள்ளும்போது அவர்களைக் காப்பாற்றக் கூடிய நபர்களின் பெயர்களை நினைத்துக் கொள்வார்கள் இன்றும் அதனால்தான் பிரதமர் மோடி இப்போது தனது இரண்டு நண்பர்களின் பெயர்களை எடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார். 

தன்னை காப்பாற்றுங்கள்’ என்று அம்பானி, அதானியிடம் தற்போது மோடி மன்றாடி வருகிறார் என்றும் அதானி எவ்வாறு டெம்போவில் பணம் அனுப்பினார் என்பது மோடிக்குத் தெரியும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி 22 பேருக்காகத்தான் வேலை செய்கிறார் என விமர்சித்த அவர், அந்த 22 பேரிடம் இந்தியாவில் உள்ள 70 கோடி பேரிடம் இருக்கும் சொத்துகளுக்கு நிகரான சொத்துகள் இருக்கிறது என்று கூறினார்.  


பிரதமர் மோடியால் 22 கோடீஸ்வர்களை உருவாக்க முடியும் என்றால், இண்டியா கூட்டணி கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலனுடன் கடற்கரைக்கு சென்ற காதலி.. திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு..!