Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் வங்கிக்கு கெடு விதித்த ரிசர்வ் வங்கி!

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (15:27 IST)
நீரவ் மோடி நிறுவனத்தின் வெளிநாட்டு வைர இறக்குமதிகளுக்கான பணத்தை வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தருமென பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணியாளர்கள் சிலர் போலியான உறுதியளிப்பு கடிதம் அளித்ததாக தெரிகிறது. 

இதை நம்பி இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள் கோடிக்கணக்கான டாலரை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடனாக கொடுத்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்கில் குவிந்த இந்த பணம் வெளிநாடுகளுக்கு கைமாறி இருக்கிறது. 
 
இதன் மூலம் ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் மோசடி விளைவுகளுக்கு வங்கிதான் பொறுப்பு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாம்.
 
மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 30 வங்கிகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,300 கோடியை அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதை செய்ய தவறினால் வங்கி துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும், நிதி சந்தையில் குழப்பம் ஏற்படும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments