Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஷ்கர் மாநிலத்தில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்படும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (07:57 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது என்பதும் முதல் கட்ட தேர்தல் கடந்த ஏழாம் தேதி முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தல் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இதனை அடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ராஜநாத்சிங், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று பேசினார். 
 
2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்றும் போதை பொருள் மனித கடத்தல் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் மாநிலத்தில் மதமாற்றம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
 மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவோம் என தைரியமாக அமைச்சர் ராஜநாத்சிங், தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments