நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: ஆருஷி பெற்றோர் விடுதலை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (18:01 IST)
ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர்களை சமீபத்தில் அலகபாத் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்தது.



 
 
இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜெயில் அதிகாரிகளின் வழக்கமான நடைமுறைகள் காரணமாக ஆருஷியின் பெற்றோர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த நிலையில் சற்றுமுன்னர்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் காசியாபாத் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். சிறையில் இருந்து இருவரும் வெளியே வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த நிலையில்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

பாராளுமன்ற கூட்டத்தொடரின் நடுவே ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்: வெளிநாட்டு நாயகன் என பாஜக விமர்சனம்..!

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments