Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- பெங்களூரு ... பறக்க போகுது 10 நகரங்களில் புல்லட் ரயில்!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (12:12 IST)
சென்னை-பெங்களூரு, மும்பை - டெல்லி உள்பட பத்து புதிய வழித்தடங்களில்  புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சீனா, ஜப்பானில் புல்லட் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதேபோல் இந்தியாவிலும் புல்லட் ரயில் ஓட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.  
 
இதற்காக விரிவான திட்டமிடுதலை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
 
டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால், அமிர்தசரஸ், அகமதாபாத் ஆகிய 6 வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. 
 
இதேபோல் நாக்புர்-மும்பை மற்றும் பாட்னா-கொல்கத்தா வழித்தடத்திலும் புல்லட் ரயில்களை இயக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே மைசூர்- பெங்களூரு-சென்னை இடையே புல்லட் ரயில்கள் விடவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. 
 
எனவே மொத்தமாக நாடு முழுவதும் 10 வழித்தடங்களில் புல்லட் ரயில்கள் திட்டத்தை செயல்படுத்த  ரூ.10 லட்சம் கோடி  முதலீட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை  மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. 
 
2025 அல்லது 2026ம் ஆண்டில் திட்டம் நிறைவேறும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயிலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments