Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பாஜக அரசால் நாட்டை அழிக்க மட்டுமே முடியும்”.. ராகுல் காந்தி கடும் தாக்குதல்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (09:27 IST)
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை குறித்து ஆளும் பாஜக அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், இரும்பு, சிமெண்ட், மின்சாரம் போன்ற துறைகளின் வளர்ச்சியில் இந்த ஆண்டு 0.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருப்பதாக ஒரு அறிக்கை வெளியானது.

இந்த பொருளாதார மந்த நிலை குறித்து எதிர்கட்சிகள் பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

”பாஜக அரசால் எதையும் உருவாக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக கடின உழைப்பால் உருவாக்கப்பட்டதை அழிக்க மட்டுமே முடியும்” என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த டிவிட்டர் பதிவில், L&T நிறுவன தலைவரின் செய்தி, 3 லட்சம் ரயில்வே பணியாளர்களை விலக்கும் திட்டம், 1.98 லட்சம் BSNL-MTNL ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது போன்ற செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments