Webdunia - Bharat's app for daily news and videos

Install App

700 விவசாயிகளின் குடும்பங்களின் நிலை என்ன? ராகுல் கேள்வி!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:33 IST)
விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை. 

 
இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது, விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த 152 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை பஞ்சாப் அரசு தந்துள்ளது. உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் பஞ்சாப் அரசு உறுதியளித்துள்ளது. 
 
வேளாண் சட்டங்களை அமல்படுத்தி தவறு செய்ததாக மன்னிப்புக்கோரிய பிரதமர் நிவாரணம் தரமறுப்பது ஏன்? உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். அதோடு டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments