Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருகிறது ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணம்! – காஷ்மீரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (08:58 IST)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்தி வந்த பாரத ஒற்றுமை யாத்திரை (Bharat Jodo Yatra) இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இந்தியா முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரை என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டில் குமரி முனையிலிருந்து தொடங்கிய இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி என பல மாநிலங்களை கடந்து தற்போது காஷ்மீரை அடைந்துள்ளது.

இன்றுடன் இந்த பாரத ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் ஸ்ரீநகரில் நிறைவடைய உள்ளது. இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை யாத்திரை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறியுள்ளார். இன்று ஸ்ரீநகரில் யாத்திரை நிறைவை தொடர்ந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுடன் கூட்டணி தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments