Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரம் வரும் ஜி20 பிரதிநிதிகள்; சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (08:44 IST)
ஜி20 மாநாட்டிற்கான பிரதிநிதிகள் கருத்தரங்கள் சென்னையில் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஜி20. இந்த அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் ஆங்காங்கே கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் சென்னை நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வருகை தருகின்றனர். அவர்கள் பிப்ரவரி 1ம் தேதியன்று மாமல்லபுரத்தில் உள்ள அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டைக்கல் ஆகியவற்றை சுற்றி பார்க்க உள்ளனர்.

இதனால் மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவை கொண்டு சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையிலும் பிரதிநிதிகள் வருகையையொட்டி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments