Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

Siva
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (17:14 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்த வாக்காளர்களை விட பதிவான வாக்குகள் அதிகம் இருப்பது எப்படி என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இடைப்பட்ட ஐந்து மாதங்களில் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 39 லட்சம் வாக்காளர்கள் என்பது கிட்டத்தட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.54 கோடி. ஆனால் அதைவிட 9.8 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என்று அவர் தேர்தல் கமிஷனை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த இளம்பெண்.. என்ன காரணம்?

நெல்லை மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments