Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (15:40 IST)
காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளதை அடுத்து அவர் எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகவல் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.
 
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் எம்பி ஆக இருந்தால் வயநாடு தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தகுதியிழப்பு ஜனநாயக படுகொலைக்கு சமமானது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டு உள்ளோம் என்றும் பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறி உள்ளது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments