Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களுடன் நடுக்கடலில் ராகுல்காந்தி! – மீனவர்களுக்காக உருக்கம்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (16:40 IST)
கேரளாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்ற ராகுல்காந்தி மீனவர்களுடம் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பல மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக தமிழகம் வந்த ராகுல்காந்தி சமையல் கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து உணவருந்தியது வைரலானது.

இந்நிலையில் தற்போது கேரளாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார் ராகுல்காந்தி. அங்கு கொல்லம்வாடி துறைமுகத்தில் இருந்து மீனவர்களுடன் கடலுக்குள் சென்ற அவர், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க உதவிகள் செய்தார். பின்னர் அவருக்கு படகிலேயே மீனவர்கள் மீன் சமைத்து அளித்துள்ளனர்.

பின்னர் கரை திரும்பியதும் மீனவ மக்களிடம் பேசிய ராகுல்காந்தி கடலுக்குள் மீனவர்களோடு செல்லும்போதுதான் அவர்களது சிரமங்களை அருகில் பார்க்க முடிந்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments