ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி வெளியிட்ட 'H Files..!

Siva
புதன், 5 நவம்பர் 2025 (12:47 IST)
ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் மூலம் 'வாக்குத் திருட்டு' நடைபெற்றுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கு ஆதாரமாக 'எச் பைல்ஸ்' (H Files) ஆவணங்களை இன்று வெளியிட்டார்.
 
கருத்துக் கணிப்புகளை மீறி, ஒட்டுமொத்த மாநிலத்தையும் திருடும் 'ஆபரேஷன் அரசாங்கம் திருட்டு' மூலம் காங்கிரஸ் தோல்வியை தழுவியதாக ராகுல் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி வெறும் 22,779 வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆட்சியை இழந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஹரியாணா வாக்காளர் பட்டியலில் 5.21 லட்சம் போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், 93,000 போலி முகவரி கொண்ட வாக்காளர்கள் மற்றும் ஒரே புகைப்படம் 19.26 லட்சம் வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.
 
உதாரணமாக, ராய் தொகுதியில் உள்ள 10 சாவடிகளில், பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படம் 22 வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆளுங்கட்சியுடன் இணைந்து தேர்தல் ஆணையமும் இத்திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி மேலும் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு ரூ.11.95 லட்சம் ஏமாந்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகம் உள்பட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டவர் விடுத்தவர் ஐடியில் பணிபுரியும் இளம்பெண்ணா? அதிரடி கைது..!

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments