Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முதல்வருக்கு ராகுல்காந்தி பாராட்டு

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (05:16 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்று உத்தரபிரதேசம். இந்த மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து யோகி ஆதித்யநாத் அவர்களை முதல்வராக்கியது.


 


முதல்வரான முதல் நிமிடம் முதல் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் யோகி, சமீபத்தில் ரூ.36 ஆயிரம் கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தார். இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமின்றி தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  உத்தர பிரதேச விவசாயிகளின் கடன்களை உ.பி அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது சிறு அளவிலான நிவாரணம் என்றாலும் சரியான திசையில் செல்லும் ஒரு முடிவு. நாடு முழுவதும் அவதிப்படும் விவசாயிகளுடன் நாம் அரசியல் ரீதியாக விளையாடக்கூடாது. இதுபோல நாடு முழுவதும் பேரிடர்களுக்கு ஆளாகி இருக்கும் விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்' என்று கூறியுள்ளார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments