Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முதல்வருக்கு ராகுல்காந்தி பாராட்டு

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (05:16 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்று உத்தரபிரதேசம். இந்த மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து யோகி ஆதித்யநாத் அவர்களை முதல்வராக்கியது.


 


முதல்வரான முதல் நிமிடம் முதல் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் யோகி, சமீபத்தில் ரூ.36 ஆயிரம் கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தார். இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமின்றி தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  உத்தர பிரதேச விவசாயிகளின் கடன்களை உ.பி அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது சிறு அளவிலான நிவாரணம் என்றாலும் சரியான திசையில் செல்லும் ஒரு முடிவு. நாடு முழுவதும் அவதிப்படும் விவசாயிகளுடன் நாம் அரசியல் ரீதியாக விளையாடக்கூடாது. இதுபோல நாடு முழுவதும் பேரிடர்களுக்கு ஆளாகி இருக்கும் விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்' என்று கூறியுள்ளார்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments