Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலுக்கு மேக்கப் போட முடிவு செய்த மத்திய அரசு

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (05:04 IST)
உலக அதிசயங்களில் ஒன்றும் காதலின் நினைவு சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலை பாதுகாக்க அதற்கு மேக்கப் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



 


தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வெளிவரும் மாசு மற்றும் புகை ஆகிய காரணத்தால் தூய வெள்ளை நிறத்தில் இருந்த தாஜ்மஹால் தற்போது லேசான பழுப்பு நிறத்தில் மாறி வருகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும் இழுக்க தாஜ்மஹாலின் ஒரிஜினல் நிறத்தை கொண்டு வர அதற்கு மேக்கப் போக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதற்கு ‘Mud Therapy’ என்ற மேக்கப் போட முடிவெடுத்துள்ளது.

மட் தெரபி என்பது பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்க போட்டுக்கொள்ளும் மேக்கப் போன்றது தான். தாஜ்மகால் மீது மட் தெரபி மூலம் பூசப்படும் பூச்சு, அதன் நிறத்தை அப்படியே காத்து, அதன் அழகை அதே பொழிவோடு இருக்க உதவும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments