Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலுக்கு மேக்கப் போட முடிவு செய்த மத்திய அரசு

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (05:04 IST)
உலக அதிசயங்களில் ஒன்றும் காதலின் நினைவு சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலை பாதுகாக்க அதற்கு மேக்கப் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



 


தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வெளிவரும் மாசு மற்றும் புகை ஆகிய காரணத்தால் தூய வெள்ளை நிறத்தில் இருந்த தாஜ்மஹால் தற்போது லேசான பழுப்பு நிறத்தில் மாறி வருகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும் இழுக்க தாஜ்மஹாலின் ஒரிஜினல் நிறத்தை கொண்டு வர அதற்கு மேக்கப் போக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதற்கு ‘Mud Therapy’ என்ற மேக்கப் போட முடிவெடுத்துள்ளது.

மட் தெரபி என்பது பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்க போட்டுக்கொள்ளும் மேக்கப் போன்றது தான். தாஜ்மகால் மீது மட் தெரபி மூலம் பூசப்படும் பூச்சு, அதன் நிறத்தை அப்படியே காத்து, அதன் அழகை அதே பொழிவோடு இருக்க உதவும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments