கொரோனா பத்தி கவலை இல்ல; மோடி ஜீ மயில்களோடு பிஸியா இருக்கார்! – கலாய்த்த ராகுல் காந்தி!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மத்திய அரசு கொரொனாவை கண்டுகொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒருநாள் பாதிப்புகள் 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் இந்த வார இறுதிக்குள் கொரோனா பாதிப்புகள் 50 லட்சத்தை தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி ”இந்த வாரத்தில் கொரோனா மொத்த பாதிப்புகள் 50 லட்சத்தை எட்ட உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தனிநபர் ஈகோவால் மேற்கொண்ட நடவடிக்கைகள் மொத்த நாட்டையும் பாதித்திருக்கிறது. உங்களை நீங்கள்தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments