Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா.. 500 ரூ அபராதம் – கோவில் நிர்வாகம் அதிரடி

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:36 IST)
வெத்தலை, புகையிலை பொருட்களை போட்டுவிட்டு கோவிலுக்குள் நுழைந்தால் 500 ரூபாய் அபராதம் என அறிவித்துள்ளது புகழ்பெற்ற புரி ஜெகன்நாத் ஆலய நிர்வாகம்.

இந்தியாவில் உள்ள பிரபலமான கோவில்களில் முக்கியமானது ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாத் ஆலயம். வருடத்திற்கு ஒருமுறை இங்கு நடைபெறும் தேரோட்டம் இந்திய அளவில் பிரசித்தம். 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை காண சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிகம் வருகை தருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் வெற்றிலை பாக்கு, புகையிலை பொருட்களை வாயில் போட்டு கொண்டு வருகின்றனர். அதை கோவிலின் பல பகுதிகளிலும் துப்பிவிட்டு சென்றுவிடுகின்றனர். எச்சில் துப்ப வேண்டாம் என பலகை வைத்து பயனில்லை. அதனால் வெற்றிலை, புகையிலை பொருட்கள் போட்டு வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அதையும் மீறி கோவிலுக்குள்  வெற்றிலை, புகையிலை பொருட்களை போட்டுக்கொண்டு வந்தால் 500 ரூபாய் அபராதம் என அறிவித்துள்ளது கோவில் நிர்வாகம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments