Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டம் எதிரொலி; பஞ்சாபில் முன்னிலை பெறும் காங்கிரஸ்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (12:43 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாத காலமாக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவுகள் எட்டாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலான நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் பல இடங்களில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாகவே தேர்தலில் பாஜக வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments