Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆயிரம் பேரை அடைக்க சிறை தயார்! – பஞ்சாப் ஆணையர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (13:45 IST)
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் பஞ்சாப்பில் சிறப்பு சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் சிறப்பு மருத்துவமனைகள் அமைத்தல், ரயில்பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதேசமயம் ஊரடங்கை பின்பற்றாமல் மக்கள் பலர் சாலைகளில் திரிவதும் பிரச்சினையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் 6 ஆயிரம் கைதிகளை அடைக்கும் வகையில் நான்கு சிறப்பு சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக பஞ்சாப் காவல் ஆணையர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அவர்களை சிறையில் அடைக்கவே இந்த சிறப்பு சிறைச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments