Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவி செய்யுங்கள்: அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகை!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (07:46 IST)
இந்தியா தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றும் அதனால் இந்தியாவுக்கு உதவி செய்யுங்கள் என்றும் அமெரிக்காவுக்கு பிரபல நடிகை ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
விஜய் நடித்த தமிழன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்க ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர் என்பதும் குறிப்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுடன் நட்பில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்தியா கொரோனா இரண்டாவது அலையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு தடுப்பூசி மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் கொடுத்து உதவி செய்யுங்கள் என பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டரில் அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
இதற்கு அமெரிக்க தரப்பில் இருந்து பதில் அளித்துள்ளது. கண்டிப்பாக இந்தியாவுக்கு உதவி செய்வோம் என்றும் உங்களது கோரிக்கைக்கு நன்றி என்றும் கூறப்பட்டுள்ளது இதனையடுத்து பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments