Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடுத்த ஆக்சிஜனை நோயாளியிடம் திருப்பி கேட்ட மருத்துவமனை!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (07:43 IST)
கொரோனா நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் செலுத்தி அவரது உயிரை காப்பாற்றிய நிலையில் அந்த ஆக்சிஜனை இயற்கைக்கு திருப்பி கொடுத்து விடுங்கள் என அந்த நோயாளிக்கு மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது 
 
நாக்பூரில் கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் குணமாகிய நிலையில் அந்த நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தது. உங்களுக்கு செலுத்தப்பட்ட ஒன்றரை லட்சம் ஆக்சிஜனை நீங்கள் திருப்பி இயற்கைக்கு செலுத்தி விடுங்கள் என்றும் அதற்கு குறைந்தது பத்து மரங்கள் நட்டு அதன் மூலம் ஆக்சிஜனை நீங்கள் இயற்கை திருப்பி செலுத்த விடலாம் என்றும் கூறியுள்ளது 
 
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த வேண்டுகோளை ஏற்று கண்டிப்பாக தான் 10 மரங்களுக்கும் அதிகமாக மரங்களை நட்டு இயற்கைக்கு என்னால் முடிந்த அளவு ஆக்சிஜனை திருப்பி செலுத்தி விடுவேன் என்று அவர் உறுதி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments