Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகம் வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு.. இம்முறை கன்னியாகுமரிக்கு விஜயம்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:39 IST)
ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகம் வந்தார் என்பதும் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட ஒரு சில இடங்களுக்கு சென்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மார்ச் 18 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு மீண்டும் தமிழக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் திருவனந்தபுரம் வரும் ஜனாதிபதி அங்கிருந்து கன்னியாகுமாரிக்கு வருகிறார் என்றும் கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு செல்லும் அவர் அதன் பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கன்னியாகுமாரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஒத்திகை பார்க்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments