Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவை தேடும் 4 தனிப்படைகள்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (22:30 IST)
விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீரென மாயமாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் 4 தனிப்படைகள் ஈடுபட்டு வருவதாக வெளிவந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் போலீசார் இன்று விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் அகமதாபாத் வீட்டிற்கு ஒரு வழக்கு குறித்த விசாரணைக்கு சம்மன் அளிக்க சென்றனர். ஆனால் பிரவீன் தொகாடியா வீட்டில் இல்லாததால் ராஜஸ்தான் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குஜராத் போலீசார் உடனடியாக 4 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

 பிரவீன் தொகாடியாவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துவிட்டு மாயமாகி போனதாக நாடகமிடுவதாக விஸ்வ இந்து பரிசத் தொண்டர்கள் ஆவேசம் அடைந்திருக்கும் நிலையில் இந்த செய்தியை போலீசார் மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments