Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சீர்திருத்த சட்டம்: சோனியா காந்திக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (06:57 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் வரும் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பணிபுரிந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் குடிரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்? என்றும் இது குறித்த போராட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் நடைபெற்று வரும் போது அதற்கு ஆதரவு தெரிவித்து அவர் ஒரு வார்த்தை கூட கூறாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார் 
 
புதுவை உள்பட காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களின் முதல்வர்கள் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ள நிலையில் சோனியா காந்தி இது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் மெளனமாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த கேள்விக்கு சோனியா காந்தி என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments